டெல்டா பிறழ்வு தொற்றுக்குள்ளான பெண் IDH இல் அனுமதி

'டெல்டா' பிறழ்வு தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் IDH வைத்தியசாலையில் அனுமதி 

by Staff Writer 22-06-2021 | 12:35 PM
Colombo (News 1st) 'டெல்டா' வைரஸ் பிறழ்வு தொற்றுக்குள்ளான பெண்னொருவர் மாதிவல பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார். 53 வயதான குறித்த பெண் சிகிச்சைகளுக்கான IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர். இதனிடையே, நேற்றைய தினம் (21) 2,131 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதேவேளை, நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,633 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.