Colombo (News 1st) நுவரெலியா மாவட்டத்தின் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (21) அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
வீரபுர, கலுதமத, ஹப்புகஸ்தலாவ, பெரமண தெற்கு மற்றும் கீழ் கொரகமய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.