கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 21-06-2021 | 11:45 AM
Colombo (News 1st) இன்று (21) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2028 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில், கொழும்பு மாவட்டத்தில் 302 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 307 பேரும் கண்டி மாவட்டத்தில் 27 நபர்களும் யாழ். மாவட்டத்தில் 67 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 77 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 73 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 66 பேரும் பதுளை மாவட்டத்தில் 46 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 130 நபர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் திருகோணமலை மாவட்டத்தில் 23 பேரும் வவுனியா மாவட்டத்தில் 26 பேரும் மன்னார் மாவட்டத்தில் 15 பேரும் அடங்குகின்றனர். இதனிடையே, நாட்டில் நேற்றைய தினம் (20) 47 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன.