பொன்னி சம்பா அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் பொன்னி சம்பா அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது

by Staff Writer 21-06-2021 | 11:00 PM
Colombo (News 1st) ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக உள்நாட்டு அரிசி இறக்குமதியாளர்களுக்கு விலைமனுக் கோரல் விடுக்கப்படும் என உணவு ஆணையாளர் திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அரிசித் தொகையாக இதனைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக உணவு ஆணையாளர் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.