நாளை (21) தளர்த்தப்படவுள்ள பயணத் தடை

பயணத் தடை தளர்வின் போது பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்…

by Staff Writer 20-06-2021 | 10:14 AM
Colombo (News 1st) நாளை (21) அதிகாலை 4 மணி முதல் பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளது. எனினும், ஜூன் 23 ஆம் திகதி (புதன்கிழமை) இரவு 10 மணி முதல் ஜூன் 25 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 04 மணி வரை மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இந்தநிலையில், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமையவே எதிர்வரும் நாட்களிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வலியுறுத்தியுள்ளார். அதற்கமைய, ⭕ அலுவலகங்களில் பணிபுரிவதற்கு குறைந்தளவானோரையே சேவைக்கு அழைக்க வேண்டும் ⭕ வீடுகளிலிருந்து Online ஊடாக பணிபுரிவோர் தொடர்ந்தும் அவ்வாறே செயற்படுவதற்கு நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ⭕ பொதுப் போக்குவரத்தில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் ஏற்றப்பட வேண்டும் ⭕ பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள், முகக்கவசம் அணிந்திருத்தல்  கட்டாயமாகும் ⭕ மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீடிக்கும் நிலையில், தகுந்த காரணத்திற்காக மாத்திரம் மாகாணத்திற்குள் பயணிக்க முடியம் ⭕ சுற்றுலாப் பயணங்கள், யாத்திரை செல்லல் மற்றும் கொண்டாட்டங்களுக்கு தடை ஆகிய கட்டுப்பாடுகளை பின்பற்றுதல் வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.