by Staff Writer 20-06-2021 | 2:53 PM
Colombo (News 1st) பயணக் கட்டுப்பாடு நீக்கப்படுகின்ற நிலையில் பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை (21) முதல் திறக்கப்படவுள்ளன.
இதனடிப்படையில் தம்புள்ளை, தம்புத்தேகம, நாரஹேன்பிட்ட, கெப்பிட்டிபொல, இரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் சுகாதார வழிகாட்டல்களுடன் திறக்கப்படவுள்ளன.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய வர்த்தக நடவடிக்கைளும் இடம்பெறவுள்ளன.