by Staff Writer 18-06-2021 | 9:36 AM
Colombo (News 1st) கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 28 ஆயுர்வேத வைத்தியசாலைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவிக்கின்றது.
அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் யாழ். கைத்தடி, பொரளை, ஹம்பாந்தோட்டை மற்றும் நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலைகளும் இவற்றில் அடங்குவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஏனைய 24 ஆயுர்வேத வைத்தியசாலைகளும் மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்படுகின்ற வைத்தியசாலைகளாகும்.
குறித்த 28 வைத்தியசாலைகளிலும் 2500 நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும் என உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.