by Staff Writer 17-06-2021 | 10:05 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் வத்தளையில் உள்ள வீடு இன்று பொலிஸாரால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அரசியல் கூட்டமொன்றை நடத்துவதற்காக மக்கள் ஒன்றிணைக்கப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் வீட்டிற்கு சென்றாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது ஹரின் பெர்னாண்டோ குறித்த பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
சோதனை நடவடிக்கையின் பின்னர் பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட குழுவினர் அங்கிருந்து வெளியேறியதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.