தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1561 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,561 பேர் கைது

by Staff Writer 17-06-2021 | 2:02 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 1561 பேர், 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டி பகுதியிலேயே பெருமளவானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கண்டியில் 165 பேரும் மாத்தளையில் 137 பேரும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறாது, அத்தியாவசிய தேவையை தவிர்த்து வீடுகளிலிருந்து வௌியில் செல்ல வேண்டாம் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.