பொருட்கள் விநியோகசேவையின் செல்லுபடி காலம் நீடிப்பு

பொருட்கள் விநியோக சேவை அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடி காலம் நீடிப்பு 

by Staff Writer 16-06-2021 | 11:46 AM
Colombo (News 1st) பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் பொருட்கள் விநியோக சேவைக்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி தங்களின் பகுதிகளில் பொருட்களை விநியோகிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். அனுமதிப்பத்திரத்தினூடாக பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய சேவைகளை உரியவாறு மேற்கொள்ளுமாறும் அவர் கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்