.webp)
பிரேரணை எனக்கு கிடைத்தது. கையொப்பமிடும் சந்தர்ப்பத்திலேயே உறுப்பினர் ஒருவர் எனக்கு பிரதி அனுப்பியிருந்தார். அதிலிருக்கும் குறைபாடுகளை எதிர்காலத்தில் நாட்டிற்கு தெளிவுபடுத்துவேன். காய்க்கும் மரமே கல்லடி படும். நாட்டு மக்கள் என்னைப் பற்றி கூறும் விடயங்கள், எனது சக அமைச்சர்கள் என்னைப் பற்றி கூறும் விடயங்கள், ஜனாதிபதியும், பிரதமரும் என்னைப் பற்றி கூறுபவற்றை சாகர காரியவசத்தின் அறிவிப்புடன் புரிந்துகொண்டேன். அத்தகையதொரு அறிவிப்பை விடுத்து என்னுடைய பலத்தை உணரவைத்தமைக்கு சாகர காரியவசமே உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். உண்மையில் சாகர காரியவசத்தை சிரமத்திற்குள் ஆழ்த்தும் நோக்குடனேயே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்