by Chandrasekaram Chandravadani 15-06-2021 | 12:16 PM
Colombo (News 1st) நாட்டில் நேற்றைய தினம் (14) 2,284 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.
இவர்களில் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 526 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 287 பேரும் பதுளை மாவட்டத்தில் 98 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 29 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 40 தொற்றாளர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் மன்னார் மாவட்டத்தில் ஐவரும் வவுனியா மாவட்டத்தில் 13 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 31 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 123 பேரும் கண்டி மாவட்டத்தில் 93 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 91 பேரும் யாழ். மாவட்டத்தில் 61 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 30 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 47 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், நாட்டில் இதுவரை 225,922 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் 57 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன.