by Staff Writer 15-06-2021 | 1:15 PM
Colombo (News 1st) யாழ். ஊர்காவற்றுறை - சுருவில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் திமிங்கிலமொன்றின் உடல் கரையொதுங்கியுள்ளது.
சுமார் 20 அடி நீளமுள்ள திமிங்கிலம் இன்று (15) காலை கரையொதுங்கியிருந்துள்ளதுடன் அப்பகுதி மக்கள் கடற்றொழில் திணைக்களத்திற்கு இது குறித்து அறிவித்துள்ளனர்.
இதேவேளை, மன்னார் - வங்காலை பகுதியில் ஆமையொன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
15 கிலோகிராம் எடை கொண்ட கடலாமை நேற்றிரவு கரையொதுங்கியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த கடலாமையின் ஓடு மற்றும் இரண்டு கால்களும் சிதைவடைந்துள்ளன.
இதனுடையே, புத்தளம் - முந்தல் - சின்னப்பாடு கடற்கரையோரத்தில் உயிரிழந்த நிலையில் கடலாமையொன்றின் உடல் கரை ஒதுங்கியுள்ளது.
நேற்று மாலை கரையொதுங்கிய சுமார் 3 அடி நீளமுடைய கடலாமையின் சில உறுப்புகள் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.
முந்தல் பகுதியில் இதுவரை உயிரிழந்த நான்கு கடலாமைகளும் டொல்பின் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.