X-Press Pearl கப்பலின் கெப்டன் பிணையில் விடுவிப்பு

X-Press Pearl கப்பலின் கெப்டன் 20 இலட்சம் ரூபா பிரத்தியேக பிணையில் விடுவிப்பு

by Staff Writer 14-06-2021 | 9:45 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட MV X-Press Pearl கப்பலின் கெப்டனை 20 இலட்சம் ரூபா பிரத்தியேக பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு பிரதம மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த வழக்கு கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள ரஷ்ய பிரஜையான கெப்டன், நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி, அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார். வழக்கு மீண்டும் அடுத்த மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.