Colombo (News 1st) நீதித்துறைக்கான சில நியமனங்களை ஜனாதிபதி இன்று (14) வழங்கினார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயற்பட்ட அர்ஜூன ஒபேசேகர, உயர் நீதிமன்ற நீதியரசராக இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் நடைபெற்றது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரியந்த பெர்னாண்டோ இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.