71 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல்

பருத்தித்துறை கடற்பரப்பில் 71 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல்

by Staff Writer 14-06-2021 | 11:31 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் 71 மில்லியன் ரூபா பெறுமதியான சுமார் 237 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று (14) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது டிங்கி படகொன்றிலிருந்து கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அச்சுவேலி மற்றும் பருத்தித்துறை பகுதிகளை சேர்ந்த 28 மற்றும்29 வயதான சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.