தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 1,353 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 1,353 பேர் 24 மணித்தியாலங்களில் கைது

by Staff Writer 13-06-2021 | 3:14 PM
Colombo (News 1st) இன்று (13) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களிலேயே அதிகூடிய நபர்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றசாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 மணித்தியாலங்களில் 1,353 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுவரையான காலப்பகுதியில் 31,395 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இராஜகிரிய - பண்டாரநாயக்கபுர பகுதியில் ட்ரோன் கெமராக்கள் மூலம் நேற்று நடத்தப்பட்ட கண்காணிப்பின் போது தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் 14 பகுதிகளில் நேற்று மாத்திரம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். மாகாண எல்லைகளை மீறி பயணித்த 188 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் இன்றும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.