by Staff Writer 11-06-2021 | 10:52 PM
Colombo (News 1st) சில கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்க ஒன்றியம் இன்று (11) நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டது.
COVID நோயாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகள், மத்திய நிலையங்கள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளைத் தவிர்ந்த ஏனைய சுகாதாரத்துறை சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக சென்றிருந்த நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன், தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.
திருகோணமலை, மட்டக்களப்பு, மாத்தளை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால், சில இடங்களில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தாமதமடைந்தன.