by Staff Writer 10-06-2021 | 11:37 AM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, கொள்ளுப்பிட்டியிலுள்ள சொகுசுமாடி குடியிருப்பொன்றின் மேல் மாடியிலுள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில் களியாட்ட நிகழ்வை நடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 9 பேரில் மூன்று பெண்களும் அடங்குகின்றனர்.
அத்துடன், இவர்களில் வௌிநாட்டவர்கள் மூவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் அனைவரும் இன்று (10) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.