தடுப்பூசி வழங்குவதில் இருந்து அதிகாரிகள்  விலகல்

கொழும்பில் பிரதேச செயலாளர்கள்,  துறைசார் அதிகாரிகள் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் இருந்து விலகல்

by Staff Writer 10-06-2021 | 10:25 PM
Colombo (News 1st) கொழும்பு மாவட்டத்தில் பிரதேச செயலாளர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தனர். AstraZeneca முதலாம் தடுப்பூசியை ஏற்றியவர்களின் பெயர்ப் பட்டியலை இந்த அதிகாரிகள் சுகாதார தரப்பிடம் கோரிய போதிலும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளமையே இதற்கான காரணமாகும். சுகாதார துறையில் இருந்து வெளித்தரப்பினருக்கு இந்ததக் தகவல்களை வழங்க முடியாது என சுகாதார அமைச்சின் செயலாளர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு அறிவித்துள்ளது.