பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படுகிறது வவுனியா வளாகம்

பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படுகிறது வவுனியா வளாகம்

by Staff Writer 09-06-2021 | 12:58 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், நாட்டின் 17 ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் அமையவுள்ளது. வியாபார கற்கைகள், பிரயோக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் கற்கைகள் எனும் மூன்று கற்கை நெறிகளின் கீழ் உயர்கல்வியை வழங்குவதற்காக இந்த பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதற்கமைய, புதிய பல்கலைக்கழகத்திற்கு 'இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்' என பெயர் சூட்டப்படுவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல், வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி த. மகேஷ்வரன் நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறினார்.