நாட்டில் மேலும் 54 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 54 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 09-06-2021 | 8:32 AM
Colombo News 1st) நாட்டில் ஒரு நாளில் அதிக கொரோனா மரணங்கள் நேற்று (08)  உறுதிப்படுத்தப்பட்டன. நேற்றைய தினம் கொவிட் மரணமேதும் பதிவாகவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனினும், கடந்த 10 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 15 கொரோனா மரணங்களும் ஜூன் 2 ஆம் திகதி முதல் ஜூன் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 39 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன. நேற்று உறுதிப்படுத்தப்பட்ட 54 மரணங்களுடன் நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,843 ஆக அதிகரித்துள்ளது.