மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு 

by Staff Writer 09-06-2021 | 9:01 AM
Colombo (News 1st) தரம் ஒன்றில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் COVID - 19 நிலைமைகளை கருத்திற்கொண்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.