by Staff Writer 09-06-2021 | 10:59 AM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 1,034 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பிற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் 14 இடங்களில் 3,369 வாகனங்கள் நேற்று சோதனையிடப்பட்டன.