சிறுமி ஒருவரை இணையத்தளத்தினூடாக விற்ற ஒருவர் கைது

சிறுமி ஒருவரை இணையத்தளத்தினூடாக விற்ற ஒருவர் கைது

by Staff Writer 09-06-2021 | 3:31 PM
Colombo (News 1st) பாலியல் நடவடிக்கைளுக்காக, இணையத்தளத்தினூடாக சிறுமியொருவரை விற்பனை செய்த ஒருவர் கல்கிசை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசையில் வாடகை வீடொன்றில் சிறுமியை தடுத்துவைத்து, இணையத்தளத்தில் சிறுமியின் நிழற்படத்தை பிரசுரித்து, பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தெல்கொட பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 35 வயதான சந்தேகநபர், மொறட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுமியை பாலியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.