இன்று 16 மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது

இன்று (09) 16 மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது

by Chandrasekaram Chandravadani 09-06-2021 | 11:48 AM
Colombo (News 1st) 16 மாவட்டங்களின் 110 பிரதேசங்களில் இன்று (09) கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, அனுராதபுரம், பதுளை, நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, மற்றும் கேகாலை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று தடுப்பூசி செலுத்தப்படுகின்றது.