12 மாவட்ட மக்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

12 மாவட்ட மக்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

by Staff Writer 08-06-2021 | 9:59 AM
Colombo (News 1st) 12 மாவட்டங்களுக்கான Sinopharm தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று (08) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக 450,000 தடுப்பூசிகளை 12 மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ளதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். தடுப்பூசி திட்டம் இதுவரை முன்னெடுக்கப்படாத மாவட்டங்களுக்கே இந்த தடுப்பூகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கமைய திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, மாத்தளை, புத்தளம், கேகாலை, பதுளை, மொனராகலை, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய 12 மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.