எண்ணெய் கசிவு குறித்து ஆராய 2 குழுக்கள் நியமனம்

சப்புகஸ்கந்த எண்ணெய் கசிவு தொடர்பில் ஆராய இரு குழுக்கள் நியமனம்

by Staff Writer 08-06-2021 | 5:16 PM
Colombo (News 1st) சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் நிலத்துக்கடியில் காணப்படும் தாங்கியில் பாரியளவில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்கு இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஆய்வுக் குழுவின் அறிக்கை கிடைத்ததன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் தாங்கிகள் காணப்படும் பகுதிகளில் வௌ்ளம் ஏற்பட்டதால், தாங்கியிலிருந்து கசிந்த எண்ணெய் நீரில் கலந்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். எண்ணெய்க் கசிவினால் பிரதேச மக்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்ததன் பின்னர் இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.