77 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தளர்வு

77 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தளர்வு

by Chandrasekaram Chandravadani 07-06-2021 | 9:23 AM
Colombo (News 1st) 11 மாவட்டங்களின் 77 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அந்தவகையில் இரத்தினபுரி, கம்பஹா, நுவரெலியா, திருகோணமலை, மாத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளிலேயே தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.