மேலுமொரு டொல்பினின் உடல் கரையொதுங்கியது

மேலுமொரு டொல்பினின் உடல் கரையொதுங்கியது

by Staff Writer 07-06-2021 | 12:22 PM
Colombo (News 1st) வாத்துவ - தல்பிட்டிய கடற்பரப்பில் உயிரிழந்த மற்றுமொரு டொல்பினின் உடல் இன்று (07) காலை கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய டொல்பின் உடல் தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணைகள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். இதனிடையே, நாட்டின் மேற்கு கடற்பரப்பில் உயிரிழந்த 7 ஆமைகள் மற்றும் டொல்பின் ஒன்றின் உடல் நேற்று (06) கரையொதுங்கின.