by Staff Writer 07-06-2021 | 4:09 PM
Colombo (News 1st) பாகிஸ்தானின் தென்பிராந்தியத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்னர்.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் பயணித்த ரயிலொன்று தடம்புரண்டு மற்றொரு ரயில் பாதையில் வீழ்ந்துள்ளது.
இதன்போது அந்தப் பாதையில் வந்த பயணிகளை ஏற்றிய ரயில், குறித்த ரயிலுடன் மோதியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்புக் குழுக்கள் மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சேர்த்துள்ளனர்.