கப்பலில் அமிலக்கசிவு இருப்பதை அறிந்திருந்த கெப்டன்

கப்பலில் நைட்ரிக் அமிலக் கசிவு இருந்ததை 10 நாட்களுக்கு முன்னரே கெப்டன் அறிந்திருந்ததாக தகவல்

by Staff Writer 07-06-2021 | 11:18 PM
Colombo (News 1st) X-Press Pearl கப்பலில் தீ பரவுவதற்கு 10 நாட்களுக்கு முன்னரே அதில் ஏற்றப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து நைட்ரிக் அமிலம் கசிவதை கப்பலின் கெப்டன் உள்ளிட்ட பணியாளர்கள் அறிந்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன், கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா முன்னிலையில் இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார். கப்பலின் கெப்டன் இந்த அமில கசிவு தொடர்பாக கப்பலுக்கு உரிமையுடைய வெளிநாட்டு நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக செயற்படும் நிறுவனத்திற்கு அறிவித்திருந்ததாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.