பாராளுமன்ற சபை அமர்வு தொடர்பான அறிவித்தல்

பாராளுமன்ற சபை அமர்வு தொடர்பான அறிவித்தல்

by Staff Writer 07-06-2021 | 11:11 AM
Colombo (News 1st) பாராளுமன்ற அமர்வை நாளை (08) மாத்திரம் நடத்துவதற்கு இன்று (07)  இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அமுலிலுள்ள பயணத் தடைக்கு மத்தியில் பாராளுமன்ற அமர்வுகளை நடத்திச் செல்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.