யால சரணாலயத்தை திறக்க தீர்மானம்

பிரான்ஸ் கடற்படையினருக்காக திறக்கப்படவுள்ள யால சரணாலயம்

by Staff Writer 06-06-2021 | 1:47 PM
Colombo (News 1st) எதிர்வரும் 8 ஆம் திகதி யால சரணாலயத்தை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் கடற்படையினருக்காக சரணாலயம் திறக்கப்படவுள்ளது. அன்றைய தினம் மாத்திரம் சரணலாயத்தை திறக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். குறித்த பிரான்ஸ் கடற்படையினரின் சுற்றுலாப் பயணங்கள் அனைத்தும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேற்பார்வையில் இடம்பெறுவதாக அவர் கூறினார். இந்த விடயம் குறித்து இலங்கை கடற்படையிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான கப்பலொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கடற்படை தெரிவித்தது. எனினும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையில் பயிற்சிகள் ஏதும் நடைபெற மாட்டாது என தெரிவிக்கப்பட்டது.