by Staff Writer 06-06-2021 | 9:51 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான 1921 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 1172 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,67,304 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 40 COVID மரணங்கள் நேற்று (05) உறுதி செய்யப்பட்டன.
நேற்று ஒரு மரணமும், கடந்த 21 ஆம் திகதி முதல் ஜூன் 4 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 39 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் 23 ஆண்களும் அடங்குகின்றனர்.
கொழும்பு 10, கொழும்பு 9, களனி, கண்டி, மட்டக்களப்பு,கிண்ணியா, நுவரெலியா, மஸ்கெலியா,பொகவந்தலாவை உள்ளிட்ட பகுதிகளில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1696 ஆக அதிகரித்துள்ளது.