5,000 ரூபா கொடுப்பனவிற்கு இடையூறாகும் மழை

5,000 ரூபா கொடுப்பனவிற்கு இடையூறாகும் மழை

by Staff Writer 05-06-2021 | 9:25 AM
Colombo (News 1st) நிலவும் சீரற்ற வானிலையால் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் பணிகளில் தாமதம் ஏற்படலாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலையால், 5 மாவட்டங்களில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் தாமதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். எனினும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். கொடுப்பனவை வழங்கும் உத்தியோகத்தர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.