48 கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

48 கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Staff Writer 05-06-2021 | 9:05 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்று தொடர்பான மேலும் 48 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன நேற்று (04) உறுதிப்படுத்தியுள்ளார். மே மாதம் 11 ஆம் திகதி முதல் ஜூன் 03 ஆம் திகதி வரை இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 18 பேர் வீடுகளிலேயே மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,656 ஆக அதிகரித்துள்ளது.