by Bella Dalima 05-06-2021 | 5:05 PM
Colombo (News 1st) மாவனெல்ல - தெவனகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன நால்வரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் (56), தந்தை (57), மகள் (23), மகன் (29) ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்புப் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.