Colombo (News 1st) தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முழு ஊரடங்கு சட்டம் 7 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதனை நீடிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (04) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன்போது, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை 14 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.