கினிகத்ஹேனையில் வேன் குடைசாய்ந்ததில் ஒருவர் பலி

கினிகத்ஹேனையில் வேன் குடைசாய்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 05-06-2021 | 1:59 PM
Colombo (News 1st) ஹட்டன் - கினிகத்ஹேனை பகுதியில் வேனொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டனில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 79 வயதான பெண்ணின் சடலத்தை, ஓட்டமாவடிக்கு ஏற்றிச்சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த வேனில், ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று உத்தியோகத்தர்களும் பயணித்துள்ளனர். ஹட்டனிலிருந்து கண்டியூடாக ஓட்டமாவடிக்கு பயணிக்கும் போதே, ஹட்டன் - கினிகத்ஹேனை பகுதிக்கிடையில் இன்று (05) காலை 7 மணியளவில் வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது. மழையுடனான வானிலையால், வீதியில் வழுக்கிச் சென்று வேன் விபத்துக்குள்ளானமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.