English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
05 Jun, 2021 | 5:28 pm
Colombo (News 1st) யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் மூலம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போதைய கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்று முதல் நோயாளிகளுக்கான மருந்துப் பொருட்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.
எனவே, நோயாளர்கள் தமக்கு தேவையான மருந்துகளை 021 221 4249 அல்லது 021 222 2261 அல்லது 021 222 3348 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தபால் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளினிக் முறையில் வைத்திய சேவையை பெறுவோர், மேற்கூறப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தத்தமது விபரங்களை பதிவு செய்யுமாறு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் எஸ்.ஶ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
05 Jun, 2022 | 04:47 PM
19 Feb, 2022 | 08:22 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS