நிவாரணத்திட்டங்களை முன்னெடுக்குமாறு பிரதமர் ஆலோசனை

சீரற்ற வானிலையால் 130,672 பேர் பாதிப்பு; நிவாரணத் திட்டங்களை முன்னெடுக்குமாறு பிரதமர் ஆலோசனை 

by Staff Writer 04-06-2021 | 4:28 PM
Colombo (News 1st) மழையுடனான வானிலையால் 05 மாவட்டங்களில் 130,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சுமார்  5,067 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவாக நிவாரணத் திட்டங்களை முன்னெடுக்குமாறு இடர் முகாமைத்துவ அமைச்சருக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.