மட்டக்களப்பில் பொலிஸாரால் கைதான இளைஞர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் பொலிஸாரால் கைதான இளைஞர் உயிரிழப்பு ; விசாரணை ஆரம்பம்

by Staff Writer 03-06-2021 | 2:00 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருதயபுரம் பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றிரவு (02) குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் சில மணித்தியாலங்களின் பின்னர் நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர். இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணையும் பிரேத பரிசோதனையும் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன. எவ்வாறாயினும் இளைஞரின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.