தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 947 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 947 பேர் கைது

by Staff Writer 03-06-2021 | 1:25 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 947 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்படடுள்ளனர். மாத்தளை பகுதியிலேயே பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 163 பேர் மாத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தவிர குளியாப்பிட்டிய பகுதியில் 88 பேரும் நிக்கவரெட்டிய பகுதியில் 73 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 21,807 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பயணித்த 25 வாகனங்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு நகரில் கைப்பற்றப்பட்ட 16 வாகனங்களும் இதில் அடங்குகின்றன.

ஏனைய செய்திகள்