எண்ணெய் கசிவு ஏற்பட்டால் கட்டுப்படுத்த தயார்

கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் கட்டுப்படுத்த தயார்

by Staff Writer 03-06-2021 | 11:12 AM
Colombo (News 1st) X-Press Pearl கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்படுமாயின் அதனை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது. கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் டர்னி பிரதீப் குமார இது தொடர்பில் நியூஸ்பெஸ்ட் தெளிவுப்படுத்தினார். கப்பலில் 322 தொன் எண்ணெய் காணப்பட்ட போதிலும் தற்போது எண்ணெய் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என அவர் கூறினார். கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படுமாயின் ,அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக டர்னி பிரதீப் குமார குறிப்பிட்டார். சுழியோடிகளையும் இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் தெரிவித்தார். இதேவேளை கப்பல் தீப்பற்றியதால் நாட்டிற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீட்டை பெற்றுக் கொள்வதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்க சிறப்பு குழுவொன்று செயற்பட்டு வருவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சட்ட மா அதிபரின் தலைமையில் இந்த குழு செயற்படுகின்றது. தற்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த அரச நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர்  திணைக்களம் தெரிவித்துள்ளது.