பூநகரி பிரதேச சபை உறுப்பினர் ஜெயகாந்தன் காலமானார்

பூநகரி பிரதேச சபை உறுப்பினர் ஜெயகாந்தன் காலமானார்

by Staff Writer 01-06-2021 | 9:33 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - பூநகரி பிரதேச சபை உறுப்பினர் ஜெயகாந்தன் காலமானார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான ஜெயக்காந்தன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்  உயிரிழந்துள்ளார். தண்டுவடம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான சத்திர சிகிச்சை யாழ்.போதனா வைத்தியசாலையில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றது. எனினும், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.