பிறந்தநாள் விருந்துபசாரம்: மேலும் 6 பேர் கைது

பிறந்தநாள் விருந்துபசாரம் நடத்தியமை தொடர்பில் மேலும் 6 பேர் கைது

by Staff Writer 01-06-2021 | 11:16 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் பிறந்தநாள் விருந்துபசாரம் நடத்தியமை தொடர்பில் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நேற்று (31) கைது செய்யப்பட்ட அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க, நடிகை பியூமி ஹன்சமாலி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இருவரும் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஏனையோரை கைது செய்வதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்தில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.