தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1047 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1047 பேர் கைது

by Staff Writer 01-06-2021 | 10:29 AM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் ஒரே நாளில் அதிகூடிய சந்தேகநபர்கள் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய, இன்று (01) காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 1,047 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். கண்டி, மாத்தளை மற்றும் நிக்கவரெட்டிய ஆகிய பகுதிகளிலேயே அதிகளவானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையில் 19,102 பேர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.