கப்பலின் கெப்டனிடம் CID விசாரணை

தீப்பற்றிய  MV X-Press Pearl கப்பலின் கெப்டனிடம் CID விசாரணை 

by Staff Writer 31-05-2021 | 11:49 PM
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய  MV X-Press Pearl கப்பலின் கெப்டன் உள்ளிட்டவர்களிடம் இன்றும் விசாரணை நடத்தப்பட்டது. கொழும்பு துறைமுகத்திற்கு வெளியில் தீப்பிடித்த கப்பலின் கெப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும் பிரதி பொறியியலாளரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்றும் விசாரணை நடத்தினர். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று பிற்பகலில் MV X-Press Pearl கப்பலின் கெப்டனிடம் வாக்குமூலம் பெறுவதற்கு சென்றிருந்த போதிலும், அப்போது அவரிடம் சில ஆவணங்கள் இருக்காததால், மீண்டும் இன்று வாக்குமூலம் பெற வேண்டியேற்பட்டது. குறித்த கெப்டென் உள்ளிட்ட கப்பலின் பணியாளர்கள் சிலர் வெள்ளவத்தையிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.