சஹ்ரானுக்கு உதவிய திருமண பதிவாளர் கைது

சஹ்ரானுக்கு உதவிய திருமண பதிவாளர் ஒருவர் கைது

by Staff Writer 31-05-2021 | 3:12 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹஷீம் மறைந்திருக்க உதவிய, ஒலுவிலைச் சேர்ந்த திருமண பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு காத்தான்குடி, அல்லியார் பகுதியில் தமது எதிர்ப்பாளர்களுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சஹ்ரான் ஹஷீம் உள்ளிட்ட நால்வர் ஒலுவிலுக்கு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதன்போது, சஹ்ரான் உள்ளிட்ட நால்வரும் மறைந்திருக்க குறித்த திருமண பதிவாளர் உதவியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சஹ்ரானுடன் மறைந்திருந்தவர்களில் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்